சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

0
15

தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சேலம் சீல​நாயக்​கன்​பட்டி பைபாஸ் பகு​தி​யில் உள்ள தாள ​முத்து நடராஜன் மைதானத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்​தது.

இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்க சீல​நாயக்​கன்​பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்​திருந்​தார். அவர் கடந்த 20 ஆண்​டு​ களாக மனை​வி, மகன், மகளு​டன் சேலத்தில் வசித்து வந்தார். மேலும், வெள்​ளிப் பட்டறை மற்​றும் கட்​டிட வேலைக்கு சென்று வந்​தார்.

தவெக நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க அடை​யாள அட்டை வைத்​திருந்​தவர்​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், அடை​யாள அட்டை ஏது​மின்றி சிராஜ் உள்ளே நுழைந்​துள்​ளார்.

விஜய் பேசி முடித்து கிளம்​பத் தயா​ராக இருந்த நேரத்​தில், நீண்​டநேரம் வெயி​லில் காத்​திருந்த சிராஜ் திடீரென மயங்கி விழுந்​தார். மைதானத்​தில் இருந்த ஆம்​புலன்ஸ் மூலம் சிராஜ் சீல​நாயக்​கன்​பட்டி பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், சிராஜ் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். தகவலறிந்து வந்த தவெக மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் பார்த்​திபன், சிராஜ் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறி​னார்.

அன்​ன​தானப்​பட்டி போலீ​ஸார் சிராஜ் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். முதல்​கட்ட விசா​ரணை​யில், ஓராண்​டுக்கு முன்பு உடல்​நிலை பாதிப்பட்ட சிராஜ், இதய அறுவை சிகிச்சை செய்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. தொடர்ந்​து, அன்​ன​தானப்​பட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வருகின்​றனர்​.

இதுகுறித்து கட்சி நிர்​வாகி நிர்​மல்​கு​மார் கூறும்​போது, “வட​மாநில இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டதும் உடனே முதலுதவி செய்​து, ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தோம். எனினும் அவர் உயி​ரிழந்​தார். இது எங்​களுக்கு மிக​வும் வருத்​தம் அளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here