கன்னியாகுமரி உபமின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.,21) நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்ன முட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், ஜேம்ஸ்டவுண், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், லீபுரம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.