கல்வி சீர்திருத்தத்துக்கான போராட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தொடங்கினார். வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு போன்றவை குறித்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் கல்வி சீர்திருத்தத்திற்கான கையெழுத்து இயக்கத்தை ராகுல் நேற்று தொடங்கினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகள், அதிக கட்டணம் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கல்வி முறை உங்கள் கனவுகளைத் தகர்த்திருந்தால் ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) தளத்தில் உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த முயற்சி குறைந்த கட்டண கல்வி, நியாயமான தேர்வுகள் மற்றும் கண்ணியமான வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் எழுப்புவதற்கான ஒரு தளம்.
https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணைப்பை கிளிக் செய்து இந்த இயக்கத்தில் மாணவர்கள் இணைய வேண்டும். உங்கள் பெயரைப் பதிவிட்டு, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து மனுவில் கையெழுத்திடுங்கள். அதிகமான கையெழுத்துகள் மூலம் மாணவர்களின் குரல் இன்னும் சத்தமாக ஒலிக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.















