ஃபில் சால்ட், பட்டிதார் அபாரம்: மும்பையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி

0
21

நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ஆர்சிபி தொடக்க வீரர் ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சால்ட் வெறும் 36 பந்துகளில் 78 ரன்களும், கோலி 38 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த ரஜத் பாட்டிதார் 20 பந்துகளில் 53 ரன்கள் விளாச, ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது.

241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 71 ரன்களும்  ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்து போராடினர். இருப்பினும், ஆர்சிபி பவுலர்கள் ரன் வேகத்தை மிகச்சரியாகக் கட்டுப்படுத்தினர். இறுதி ஓவர்களில் மும்பை அதிரடி காட்ட முயன்றாலும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது. அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த பில் சால்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சென்ற போட்டியில் தோல்வியடைந்த ஆர்சிபி அணி தற்போது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here