ஜன.23-ல் பிரதமர் மோடி அந்தமான் பயணம்v

0
19

சுதந்​திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்​கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்​த​மான் வரு​கிறார்.

நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக தனி ராணுவத்தை உரு​வாக்கி போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ். இவரது 129-வது பிறந்த நாள் ஜன.23-ம் தேதி நாடு முழு​வதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்​னிட்டு அந்​த​மான் நிகோ​பார் தீவில் நடை​பெறும் விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார் என்று மத்​திய அரசு அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

கடந்த 1943-ம் ஆண்டு டிசம்​பர் 30-ம் தேதி அந்​தமானின் ஸ்ரீவிஜயபுரத்​தில் (போர்ட் பிளேர்) மூவர்ண கொடியேற்றி நேதாஜி கொண்​டாடி​னார். அதை நினை​வு​கூரும் வகை​யில் 23-ம் தேதி நேதாஜி மைதானத்​தில் தேசி​யக் கொடி ஏற்றி பிரதமர் மோடி உரை​யாற்​றுகிறார்.

மேலும், இங்​குள்ள நேதாஜி​யின் உரு​வச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்​துகிறார். மேலும், சுதந்​திரப் போராட்​டத்​தில் உயிர்த் தியாகம் செய்த தியாகி​களின் நினை​விடத்​தில் பிரதமர் மோடி மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​துகிறார். அத்துடன், வீர சாவர்க்​கர் அடைக்​கப்​பட்​டிருந்த அந்​த​மானின் கொடிய சிறையைப் பார்​வை​யிட்டு அவருக்கு மரி​யாதை செலுத்துகிறார்.

பின்​னர் நிகோபர் தீவின் கேம்​பெல் பகு​தி​யில் நடை​பெற்று வரும் நலத்​திட்​டப் பணி​களை பிரதமர் மோடி பார்​வை​யிடு​கிறார். பிரதமர் மோடி​யின் அந்​த​மான் வரு​கைக்​கான ஏற்​பாடு​கள் செய்யப்​பட்டு வரு​கின்​றன.

நேதாஜி​யின் தன்​னலமற்ற சேவைக்​காக அவரது பிறந்த நாளை ”பரக்​கிரம் திவஸ்” என்ற பெயரில் ஆண்​டு ​தோறும் மத்​திய அரசு கொண்​டாடி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. இதை முன்​னிட்டு நேதாஜி மைதானத்​தில் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகளை நடத்​த உள்​ளூர்​ நிர்வாகம்​ திட்​ட​மிட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here