கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரதிநிதிகளை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்தார்.
கேரளாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், “கேரள மக்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே பாதுகாக்க முடியும். சபரிமலை தங்கம் திருடு போன வழக்கின் எப்ஐஆர்-ஐ பார்த்தேன். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் தலைவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை, நடுநிலையான விசாரணை அமைப்பிடம் கேரள முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

