மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம்: திமுக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

0
23

அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடு​வ​தாக​ பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

பாஜக மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் வெளியிட்டுள்ள அறிக்​கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்​து​வர்​கள் ஊதிய உயர்வு கோரி போராடிய ​போது, அன்​றைய எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த மு.க.ஸ்​டா​லின் ஆதரவு அளித்​தார்.

திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதி​யம் வழங்​கப்​படும் என்று மருத்​து​வர்​களிடம் அவர் சத்தி​யம் செய்​தார். ஆனால் ஆட்​சிக்கு வந்தபிறகு அந்த வாக்​குறுதி காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்​ளது.

எதிர்க்​கட்​சி​யாக இருக்​கும்​போது ஒரு முகம், ஆட்​சிக்கு வந்த பிறகு ஒரு முகம் என திமுக இரட்டை வேடம் போடு​கிறது. அன்று அவர் விடுத்த அறிக்​கைகளையே இன்று அவருக்​குத் திருப்பி அனுப்​பும் போராட்​டத்தை மருத்​து​வர்​கள் தொடங்​கி​யுள்​ளனர்.

இது முதல்​வருக்கு நேர்ந்த தலைகுனிவு. கரோனா பேரிடர் காலத்​தில் உயி​ரிழந்த 11 அரசு மருத்​து​வர் குடும்​பங்​களுக்கு மத்​திய அரசு தலா ரூ.50 லட்​சம் நிவாரணம் வழங்​கியது. ஆனால், திமுக அரசு, 10 காசு கூட வழங்​க​வில்​லை. உயி​ரிழந்த டாக்​டர் விவே​கானந்​தன் மனைவி அரசு வேலை கேட்​டுப் போராடி​யும் செவி​சாய்க்​க​வில்​லை.

சுகா​தா​ரத் துறை​யில் முன்​மா​திரி மாநிலம் எனும் தமிழகத்​தில் தான், அரசு மருத்​து​வர்​களுக்கு நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் வழங்​கப்​படு​கிறது. எனவே, இப்​போ​தாவது முதல்​வர் தனது பழைய அறிக்​கைகளை நினைத்​துப் பார்த்​து, வாக்​குறு​தி​களை நிறைவேற்ற வேண்​டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here