இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் 2,500-க்கும் மேற்பட்டோர் கைது

0
28

சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்​து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் சார்​பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அரை​யாண்டு விடு​முறை முடிந்து கடந்த 5-ம் தேதி முதல் பள்​ளி​கள் திறக்​கப்​பட்​டுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் தங்​கள் போராட்​டத்தை தொடர்​வதால் அவர்களுக்கு ஊதி​யம் வழங்​கப்​ப​டாது என்று தொடக்​கக் கல்​வித் துறை அறி​வித்​தது.

இதையடுத்​து, இடைநிலை ஆசிரியர்கள் தங்​கள் போராட்​டங்​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். 14-வது நாளாக சென்னை எழும்​பூர் காந்தி இர்​வின் பாலத்​தில் நேற்று காலை சுமார் 500 ஆசிரியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர், மதி​யம் 12 மணி​யள​வில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் இருந்து 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் பேரணி​யாக வந்து சேர்ந்​தனர். தொடர்ந்து திடீரென மேம்​பாலத்​தில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

இதனால் போக்​கு​வரத்து முழு​வதும் பாதிக்​கப்​பட்​டது. தொடர்ந்து அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். ஆசிரியர்கள் எண்​ணிக்கை அதி​க​மாக இருந்​த​தால் கைது நடவடிக்​கைகள் மட்​டும் 3 மணி நேரத்​துக்கு மேலாக நீடித்​தது.

மேலும், அப்​போது ஏற்​பட்ட தள்​ளு​முள்​ளு​வில் சில ஆசிரியர்கள் மயக்​கமடைந்​தனர். சிலருக்கு காயங்​கள் ஏற்​பட்​டன. கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்கள் மண்​டபங்​களில் அடைக்​கப்​பட்​டு, இரவில் விடுவிக்​கப்​பட்​டனர்.

ஆசிரியர்​களின் போராட்​டத்​தால் பள்​ளி​களில் மாணவர்​களின் கற்​றல் பணி​களும் பாதிக்​கப்​பட்டு வரு​வ​தால், தமிழக அரசு இந்த விவ​காரத்​தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டுமென கோரிக்​கைகள் எழுந்​துள்​ளன.

இதே​போல், பணி நிரந்​தம் செய்​யக் கோரி பகு​திநேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்​டம் நடத்​தினர். அவர்​களை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். ஆசிரியர்​களின் கைது செய்​யப்​பட்ட வீடியோக்​கள் சமூக வலைத்​தளங்​களில் வைரலாகின. இதற்கு பாமக தலை​வர் அன்​புமணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here