மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: ஆஸ்​திரேலிய வீராங்கனைகள் வில​கல்

0
27

நான்​காவது மகளிர் பிரீமியர் லீக்​(டபிள்​யூபிஎல்) கிரிக்​கெட் போட்​டியி​லிருந்து ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த 2 வீராங்​க​னை​கள் வில​கி​யுள்​ளனர்.

4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் நவி மும்பை மற்​றும் வதோத​ரா​வில் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்​ர​வரி 5-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. டபிள்​யூபிஎல் கிரிக்​கெட் தொடர் தொடங்க இன்​னும் 10 நாட்​களே உள்ள நிலை​யில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யில் இடம் பிடித்​திருந்த ஆஸ்​திரேலிய வீராங்​கனை எலிஸ் பெர்​ரி, டெல்லி கேபிடல்ஸ் அணி​யில் இடம் பிடித்​திருந்த ஆஸ்​திரேலிய வீராங்​கனை அன்​னாபெல் சதர்​லேண்ட் ஆகியோர் இந்​தத் தொடரிலிருந்து வில​கு​வ​தாக அறிவித்துள்​ளனர்.

சொந்த வேலை காரண​மாக இப்​போட்​டியி​லிருந்து வில​கு​வ​தாக இரு​வரும் அறி​வித்​துள்ளனர். இதையடுத்து எலிஸ் பெர்​ரிக்​குப் பதிலாக இந்​திய வீராங்​கனை சயாலி சத்​காரே ஆர்​சிபி அணி​யில் இணைந்​துள்​ளார். மேலும், சதர்​லேண்​ட்டுக்​குப் பதிலாக ஆஸ்திரேலி​யா​வைச் சேர்ந்த சுழற்​பந்து வீச்​சாளர் அலானா கிங் டெல்லி அணி​யில் இணை​ய​வுள்​ளார். இத்​தகவலை டபிள்​யூபிஎல் கிரிக்​கெட் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here