இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

0
17

சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்​கையை ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி​முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் 4-வது நாளாக சென்னை எழில​கத்​தை​யும், நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகத்​தை​யும் முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர்.

டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆசிரியர்​களை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர். அதேபோல் உழைப்​பாளர் சிலை அருகே கூடிய ஏராள​மான ஆசிரியர்கள், எழில​கம் நோக்கி பேரணி​யாக சென்​றனர். இந்த போராட்​டத்​தில் ஆசிரியர்​களின் குழந்​தைகள் உட்பட குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அனு​மதி இல்​லாமல் சென்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். இதனால் காம​ராஜர் சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​ய​தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்​பின் ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் சில ஆசிரியர்​களுக்கு லேசான காய​மும், மயக்​க​மும் ஏற்​பட்​டது. மயக்​க மடைந்த ஆசிரியர்கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும் கைது நடவடிக்​கையை புகைப்​படம் எடுக்க முயன்ற ஆசிரியர்​களின் செல்​போன்​களை போலீ​ஸார் பறித்​துக் கொண்​டனர். இதுத​விர பெண்​களை, ஆண் போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தாக​வும் குற்றம் சாட்டப்பட்​டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏராள​மானோர் காம​ராஜர் சாலை​யில் திடீரென போராட்​டம் நடத்​தி​ய​தால், அங்கு கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் வாக​னங்​கள் மாற்​றுப்​பாதை​யில் அனுப்​பப்​பட்​டன.

இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்​டுமென இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here