திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட பாக். பெண்ணுக்கு வாஜ்பாய் பதில் – சம்பவத்தை நினைவுகூர்ந்த ராஜ்நாத் சிங்

0
14

முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது.

மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்​தவர் முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்​வாக தினம்’ என்று மத்​திய அரசு ஆண்​டு​தோறும் கொண்​டாடி வரு​கிறது. சிறந்த அரசி​யல் தலைவரான வாஜ்​பாய், கவிஞ​ராக​வும் இருந்​தார். அவருடைய நினை​வாக கவிஞர் குமார் விஸ்​வாஸ் கவிதை நிகழ்ச்​சியை நடத்தி​னார்.

இதில் அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசிய​தாவது: முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் ஒருமுறை பாகிஸ்​தான் பயணம் மேற்​கொண்​டார். அவருடைய சிறந்த பேச்சை கேட்டு அங்​கிருந்த பெண் ஒரு​வர் வாஜ்​பாயைப் பார்த்​து, “நீங்​கள் என்னை திரு​மணம் செய்து கொள்கிறீர்​களா? அதற்கு பதில் எங்​களுக்கு காஷ்மீரை கொடுத்து விடுங்​கள்” என்று கேட்​டார். அரு​கில் இருந்த எல்​லோரும், வாஜ்பாய் என்ன பதில் சொல்​வார் என்று ஆவலாக இருந்​தனர்.

ஆனால், அந்​தப் பெண் அப்​படி கேட்​டதும் சிறிதும் தாம​திக்​காமல், “உங்​களை திரு​மணம் செய்து கொள்ள நான் தயார். ஆனால், வரதட்​சணை​யாக எனக்​குப் பாகிஸ்​தான் வேண்​டும்” என்று வாஜ்​பாய் பதில் அளித்​தார். தனது அரசி​யல் எதிரி​களை அவர் கடுமை​யாக எதிர்த்​துப் பேசி​னாலும், எல்லை மீறி பேசி​ய​தில்​லை. இமாச்​சலப் பிரதேசத்​தில் காங்​கிரஸ் ஆட்​சி​யின் போது வீர்​பத்ர சிங் முதல்​வ​ராக பதவி வகித்​தார். அவர் பங்​கேற்ற கூட்​டத்​தில் வாஜ்பாயும் பங்​கேற்​றார்.

அந்த நிகழ்ச்​சி​யில் வாஜ்​பாய் பேசும்​போது, “இங்​குள்ள அமைச்​சர்​கள் மிக​வும் ஜென்​டிலானவர்​கள் (பத்​ரா), ஆனால் வீரம்​தான் (வீர்) இல்​லை” என்று வீர்​பத்ர என்ற முதல்​வரின் பெயரை மறை​முக​மாக குறிப்​பிட்டு மிக​வும் நகைச்​சுவை​யாக விமர்​சித்​தார். இவ்​வாறு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here