புதிய ஊரக வேலை உறுதி மசோதா நிறைவேறியது

0
17

எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மசோ​தாவுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடக்​கம் முதல் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. வேலை உத்​தர​வாத நாட்​கள் 100-ல் இருந்து 125 ஆக புதிய திட்​டத்​தில் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. எனினும் மாநிலங்​களுக்​கான நிதிப் பங்​களிப்பை உயர்த்​தி​யிருப்​பதுடன் வேலைக்​கான உரிமை உள்​ளிட்ட பல விதி​களை அரசு நீர்த்​துப்​போகச் செய்​துள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டு​கின்​றன. மக்​களவை​யில் நேற்று முன்​தினம் இம்​மசோதா மீதான விவாதத்​தில், மகாத்மா காந்​தி​யின் பெயரில் உள்ள திட்​டத்​தின் பெயரை மாற்ற எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். மசோ​தாவை நாடாளு​மன்ற கூட்​டுக்​குழு ஆய்​வுக்கு அனுப்ப வலி​யுறுத்​தினர்.

இந்​நிலை​யில் மக்​களவை​யில் நேற்று இந்த மசோதா மீதான விவாதத்​திற்கு அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் பதில் அளித்​தார். அப்​போது எதிர்க்​கட்​சி​யினர் அரசுக்கு எதி​ராக முழக்​கமிட்​டு, மசோ​தா​வின் பிர​தி​களை கிழித்​தெறிந்​தனர்.

எதிர்க்​கட்​சிகளின் அமளிக்கு மத்​தி​யில் இந்த மசோதா மக்​களவை​யில் குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து மக்​களவை நாள் முழு​வதும் ஒத்தி வைக்​கப்​பட்​டது. இன்​று, நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத்​தொடரின் கடைசி நாள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

எதிர்க்கட்சிகள் பேரணி: இதற்​கிடை​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோ​தாவுக்கு எதி​ராக நாடாளு​மன்ற வளாகத்​தில் மகாத்மா காந்தி சிலை​யில் இருந்து ‘மகர் துவார்’ நுழைவு​வா​யில் வரை எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று கண்​டனப் பேரணி நடத்​தினர்.

‘மகாத்மா காந்தி என்​ஆர்​இஜிஏ’ என்ற பிரம்​மாண்ட பதாகையை ஏந்​தியபடி அரசுக்கு எதிராக முழக்​கங்​களை எழுப்​பினர். காங்​கிரஸ் தலை​வர்​கள் கார்​கே, சோனியா காந்​தி, திமுக எம்​.பி.க்.கள் டி.ஆர்​.பாலு, கனி​மொழி உள்​ளிட்​டோர் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “மக்​களிட​மிருந்து வேலை செய்​யும் உரிமை​யைப் பறிக்​கிறார்​கள். இதற்கு எதி​ராக நாடு தழு​விய இயக்​கம் நடை​பெறும்” என்​றார்.

பின்​னர் ‘எக்​ஸ்’ தளத்​தில் மல்​லி​கார்ஜுன கார்கே வெளி​யிட்ட பதிவு​களில் “தேசத் தந்தை மகாத்மா காந்​தியை மோடி அரசு அவம​தித்​தது மட்​டுமின்றி இந்​தி​யா​வின் கிராமங்​களில் சமூக-பொருளா​தார மாற்​றத்தை கொண்​டு ​வரு​வ​தில் முக்​கியப் பங்கு வகித்த வேலைக்​கான உரிமை​யை​யும் நசுஇந்தியாக்​கி​யுள்​ளது. ஆளும் சர்​வா​தி​கார அரசின் இந்த கொடுங்​கோன்​மைக்கு எதி​ராக, நாங்​கள் நாடாளு​மன்​றத்திலிருந்து வீதி​கள் வரை போராடு​வோம்” என்று கூறி​யுள்​ளார்.

முன்​ன​தாக காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் கூறுகை​யில், “இன்று நாடாளு​மன்​றம் ஜனநாயகப் படு​கொலை​யைக் காண்​கிறது. மகாத்மா காந்​தி​யின் பெயரை நீக்​கு​வதன் மூலம், அவர்​கள் ஜனநாயக விழு​மி​யங்​களை​யும், தேசத் தந்​தை​யின் சித்​தாந்​தத்​தை​யும்​ சிதைக்க முயற்​சிக்​கின்​றனர்” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here