டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தாமதம்

0
25

டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நில​வுவ​தால், சென்னை விமான நிலை​யத்​தில் விமான சேவையில் தாமதம் ஏற்​பட்​டது. டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நிலவி வரு​கிறது.

இந்த மோச​மான வானிலை​யால், டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமத​மாக வரு​கின்​றன. அந்த விமானங்கள், சென்னை வந்​து​விட்​டு, சென்​னை​யில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூர் உள்​ளிட்ட விமான நிலை​யங்​களுக்​கும் செல்ல இருப்​ப​தால், அந்த சேவை​யும் தாமதம் ஆகின்​றன.

நேற்று அதி​காலை முதல் மதி​யம் வரை, டெல்​லி​யில் இருந்து சென்னை வரவேண்​டிய ஏர் இந்​தியா மற்​றும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் 4 விமானங்கள், சுமார் ஒன்​றரை மணி நேரத்​தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமத​மாக வந்து சேர்ந்​தன.

சென்​னை​யில் இருந்து டெல்​லி, பெங்​களூர், ஹைத​ரா​பாத் புறப்​பட்டு செல்ல வேண்​டிய இண்​டிகோ, ஏர் இந்​தியா விமானங்கள், சுமார் ஒரு மணி நேரத்​தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்டு சென்​றன. விமானங்கள் தாமதம் குறித்து பயணி​களுக்கு முறையான அறி​விப்பு கொடுக்​காத​தால், பயணி​கள் அவதிக்குள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here