உடல்தான் கடவுள், மனசு தான் தெய்வம்: இயக்குநர் ரத்னகுமார் தத்துவம்

0
20

‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்​கியுள்ள படத்​துக்கு ‘29’ என்று டைட்​டில் வைத்​துள்​ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்​ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரே​யாஸ் பாத்​திமா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார்.

இந்​தப்​படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்​ஸ், ஜீ ஸ்கு​வாட் நிறு​வனங்​கள் சார்​பில் கார்த்​தி​கேயன், இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் இணைந்து தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் டைட்​டில் லுக் மற்​றும் ப்ரோமோ வீடியோ வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

இயக்​குநர் ரத்​னகு​மார் பேசும்​போது, “நான் ‘மது’ என்ற பெயரில் குறும்​படம் இயக்​கினேன். அது​தான் ‘மே​யாத​மான்’ எனும் திரைப்​பட​மாக மாறியது. அப்​படம் மூலம் என்னை அறி​முகப்படுத்​தி​யது, ஸ்டோன் பெஞ்ச் நிறு​வனம். இந்​தப் படத்​துக்கு ‘29’ என ஏன் பெயரிட்​டேன் என்​றால் அந்த வயதுதான் முக்​கிய​மானது.‌ என் வாழ்க்​கை​யில் எனக்கு அந்த வயதில்​தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்​மறை எண்​ணம் ஏற்​பட்​டது.‌

அந்​தத் தருணத்​தில் படத்​தொகுப்​பாளர் சதீஷ்கு​மார் தான் ‘உங்​களை நீங்​கள் உள்​ளுக்​குள் தேடுங்​கள் அல்​லது புறத்​தில் தேடுங்​கள்’ என்று சொல்​லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்​திரை சென்று வாருங்​கள் என அறி​வுறுத்​தி​னார். என்​னைப் பொறுத்​தவரை உடல்​தான் கடவுள். மனசு தான் தெய்​வம் என்ற கொள்கை உடைய​வன்.‌ சபரிமலை யாத்​திரை செல்​லும்​போது வாழ்க்கை ஏற்​றம் இறக்​கங்​களைக் கொண்​டது என்​பதை உணர்ந்​தேன். ‘மே​யாத மான்’ படத்​தில் பணி​யாற்​றிய​வர்​களு​டன் மீண்​டும் இ​தில் இணைந்துள்ளேன். மேயாத​மான் ரொமான்​டிக் காமெடி என்​றால் இந்த `29’ படமும் வித்​தி​யாச​மான கேரக்​டருடன் கூடிய ரொமான்​டிக் படம்​தான். நாம் அன்​றாடம் பார்க்​கும் பக்​கத்து வீட்​டுப் பையனின் கதை தான் இது” என்​றார்​. படக்​குழு​வினர்​ கலந்​து​கொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here