‘சரியான நேரத்தில் பார்முக்கு திரும்புவார்கள்’: கில், சூர்யகுமார் யாதவ் மீது இந்திய அணியின் துணை பயிற்சியாளர் நம்பிக்கை

0
26

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக நேற்று முன்​தினம் முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 214 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 19.1-வது ஓவரில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக திலக் வர்மா 62 ரன்​கள் சேர்த்​தார்.

தொடக்க வீர​ரான ஷுப்​மன் சந்​தித்த முதல் பந்​திலேயே ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 5 ரன்​களில் நடையை கட்​டி​னார். முதல் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய ஹர்​திக் பாண்​டியா 20, அக்​சர் படேல் 21 ரன்​களில் வெளி​யேறினர். பெரிய அளவி​லான இலக்கை துரத்​திய நிலை​யில் ஷுப்​மன் கில்​லும், சூர்​யகு​மார் யாத​வும் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாதது அணிக்கு அழுத்​தத்தை அதி​கரித்​தது.

இவர்​கள் இரு​வரிடம் இருந்து சர்​வ​தேச டி20 போட்​டிகளில் கடந்த ஓராண்டு கால​மாகவே பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. ஷுப்​மன் கில் கடந்த செப்​டம்​பரில் நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது இந்​திய டி20 கிரிக்​கெட் அணிக்​குள் மீண்​டும் கொண்​டு​வரப்​பட்​டார். இந்த தொடருக்கு முன்​ன​தாக இங்​கிலாந்​தில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரில் ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 2 வெற்​றிகளை​யும், தொடரை சமனிலும் முடித்​திருந்​தது.

ஷுப்​மன் கில் டி20 அணிக்​குள் கொண்​டு​வரப்​பட்​ட​தால் சிறந்த பார்​மில் உள்ள தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் வெளியே அமர​வைக்​கப்​பட்​டார். ஆனால் ஷுப்​மன் கில்​லின் மட்​டைவீச்​சில் இருந்து போதிய அளவி​லான ரன் குவிப்பு வரவில்​லை. தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான முதல் டி 20 போட்​டி​யில் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்த அவர், நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார்.

டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி-​மார்ச் மாதம் இந்​தி​யா​வில் நடை​பெற உள்ள நிலை​யில் ஷுப்​மன் கில்​லின் மோச​மான பார்ம் கவலை​யை​யும், பல்​வேறு கேள்வி​களை​யும் உரு​வாக்கி உள்​ளது. இந்​நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2-வது டி20 ஆட்​டத்​தில் 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த பின்​னர் இந்​திய அணி​யின் துணை பயிற்​சி​யாள​ரான டென் டாஷேட் கூறிய​தாவது:

கடந்த நவம்​பர் மாதம் நடை​பெற்ற ஆஸ்​திரேலிய தொடருக்கு பின்​னர் ஷுப்​மன் கில்​லின் மனநிலை​யில் சிறந்த மாற்​றத்தை கண்​டோம். தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தற்​போதைய டி20 தொடரில் முதல் இரு ஆட்​டங்​களில் அவர், எளி​தாக ஆட்​ட​மிழந்​தார். முதல் போட்​டி​யில் பவர்​பிளே​வில் அதிரடி​யாக விளை​யாடு​மாறு நாங்​கள்​தான் கூறி​யிருந்​தோம்.

அந்த போட்டி நடை​பெற்ற கட்​டாக் ஆடு​களம் சிறப்​பானது இல்​லை. இதனால் அந்த ஆட்​டத்தை விட்​டு​விடலாம். 2-வது போட்​டி​யில் ஷுப்​மன் கில் சிறந்த பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். பார்​மில் தேக்​கம் அடை​யும் போது இது நிகழும். கில்​லின் பேட்​டிங் தரம் எங்​களுக்கு தெரி​யும். அவருடைய ஐபிஎல் சாதனையைப் பார்த்​தால் சீசனுக்கு 700 ரன்​கள், 600 ரன்​கள், 800 ரன்​கள், 600 ரன்​கள் என குவித்​துள்​ளார். அதனால் அவர், மீண்​டும் பார்​முக்கு திரும்​பு​வார் என்று நாங்​கள் நம்​பு​கிறோம்.

சூர்​யகு​மார் யாதவுக்​கும் இதே நிலை​மை​தான். எங்​கள் திட்​ட​மிடல் மற்​றும் அணியை கட்​டமைத்த விதத்​தில் சற்று பின்​தங்​கி​யிருக்​கிறோம். வெளி​யில் இருந்து பார்க்​கும்​போது இது ஒரு கவலை​யாகத் தெரி​கிறது, ஆனால் சூர்​யகு​மார் யாத​வும், ஷுப்​மன் கில்​லும் சரி​யான நேரத்​தில் மீண்டு வரு​வார்​கள் என்​ப​தில்​ எனக்​கு முழு​மை​யான நம்​பிக்​கை உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here