“எனது எந்த கேள்விக்கும் அமித் ஷா பதில் தரவில்லை” – ராகுல் காந்தி விமர்சனம்

0
18

மக்​களவை​யில் தேர்​தல் சீர்​திருத்​தங்​கள் குறித்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இடையே கார​சா​ர​மான விவாதம் நடை​பெற்​றது.

இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​குத் திருட்டு குறித்த எனது செய்​தி​யாளர் சந்​திப்​பு​ குறித்து நாடாளு​மன்​றத்​தில் விவா​திக்க வரு​மாறு அமைச்​சர் அமித் ஷாவுக்கு நேரடி​யாக சவால் விடுத்​தேன். ஆனால் அவரிட​மிருந்து எந்த பதி​லும் கிடைக்​க​வில்​லை.

அவர் தவறான வார்த்​தைகளை பயன்​படுத்​தி​னார். அவரது கைகள் நடுங்​கின. இதையெல்​லாம் நீங்​கள் பார்த்​திருப்​பீர்​கள். அவர் மனதள​வில் அழுத்​தத்​தில் இருக்​கிறார். வாக்​குத் திருட்டு என்​பது மிகப்​பெரிய தேசத்​துரோகம். வெளிப்​படை​யான வாக்​காளர் பட்​டியல்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களின் செயல்​பாடு என எனது எந்​தவொரு கேள்விக்​கும் உள்​துறை அமைச்​சர் பதில் அளிக்​க​வில்​லை. இவ்​வாறு எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here