மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? – ஓபிஎஸ் கேள்வி

0
17

‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

காவிரி​யில் மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்​குப் பாதிப்பு இல்லை என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யிருப்​பது கேலிக்​கூத்​தாக உள்​ளது. கர்​நாடக முதல்​வரின் கருத்து தமிழகத்​தைப் பாலை​வன​மாக்க வழி​வகுக்​கும். இதன்​மூலம், உபரி நீரை​யும் தமிழகத்​துக்கு தரக்​கூ​டாது என்ற கர்​நாடக அரசின் தீய எண்​ணம் வெளிப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மேகே​தாட்டு அணையை கர்​நாடக அரசு கட்​டி​னால், தமிழகத்​துக்கு வரும் உபரி நீரும் நின்​று​விடும். இந்​தத் திட்​டம் கர்​நாடகத்​துக்கு மட்​டும்​தான் பயனளிக்​கும். எனவே, மேகே​தாட்டு அணை திட்​டத்​தால் தமிழகத்​துக்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று கடும் கண்​டனத்​துக்​குரியது. இதுகுறித்து திமுக அரசு வாய் திறக்​காமல் இருப்​பது ஏன்?

உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள மேகே​தாட்டு அணை குறித்து உண்​மைக்​குப் புறம்​பான கருத்​துகள் கூறு​வதை கர்​நாடக முதல்​வர் இனி​யா​வது நிறுத்​திக்​ கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here