எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம்

0
14

தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) கைவிடக் கோரி தமி​ழ​கம் முழு​வதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது. புதுக்​கோட்​டை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, மதி​முக, தவாக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் கலந்து கொண்ட நிலை​யில், தேசி​யக் கட்​சி​யான காங்​கிரஸ் சார்​பில் யாரும் பங்​கேற்​காமல் புறக்​கணித்​தது கூட்​ட​ணிக் கட்​சி​யினரிடையே விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து நம்​மிடம் பேசிய திமுக ஐடி விங்க் அணி​யின் தொகுதி ஒருங்​கிணைப்​பாளர் அறந்​தாங்கி பி.செந்​தில்​வேலன், “இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் கூட்​ட​ணி​யில் உள்ள அனைத்​துக் கட்​சிகளும் பங்​கேற்க வேண்​டும் என திமுக அழைப்பு விடுத்​து, 2 தினங்​களுக்கு முன்பு ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. ஆனால், ஏனோ ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யினர் கலந்து கொள்​ள​வில்​லை.

இதனால், புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் கட்சி இல்​லையோ என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. கடந்த தேர்​தலில் அறந்​தாங்கி தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளரை வெற்றி பெறச்​செய்​தது திமுக தான் என்​பதை அக்​கட்​சி​யினர் மறந்​து​விடக்​கூ​டாது” என்​றார்.

ஆனால் காங்​கிரஸ் மூத்த நிர்​வாகி​களோ, “ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வது தொடர்​பாக எங்​களுக்கு எந்த தகவலை​யும் திமுக-​வினர் தெரிவிக்​க​வில்​லை. முறை​யான அழைப்பு இல்​லாமல் எப்​படி கலந்து கொள்ள முடி​யும்? மேலும், புதுக்​கோட்டை மாவட்​டத்​துக்கு அரசு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் வந்​த​போது நாங்​கள் கலந்து கொள்​வது குறித்து திமுக மூத்த நிர்​வாகி​களிடம் கேட்​ட​போது, அரசு விழா​வில் காங்​கிரஸ் பங்​கேற்க வேண்​டும் என்ற கட்​டா​யம் இல்லை என்று கூறி​விட்​டார்​கள். இப்​படி​யெல்​லாம் பேசி​னால் எப்​படி கலந்​து​கொள்ள முடி​யும்?” என்​ற​னர்.

எஸ்​ஐஆர் விவ​காரத்தை முதலில் கையில் எடுத்த காங்​கிரஸ் கட்​சி, அதே எஸ்​ஐஆருக்கு எதி​ராக நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்​காதது கூட்​ட​ணிக்​குள் புகைச்​சலை ஏற்​படுத்தி உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here