33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
11

மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​தக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டு உள்​ளது.

மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் நாரி சக்தி வந்​தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால் இந்த சட்​டம் இது​வரை அமல்​படுத்​தப்​பட​வில்​லை.

நாடு முழு​வதும் வரும் 2027-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. இதன்​பிறகு மக்​கள் தொகை​யின் அடிப்​படை​யில் தொகு​தி​கள் மறு​வரையறை செய்​யப்​படும்.

புதிய தொகு​தி​களின் அடிப்​படை​யில் 33 சதவீத மகளிர் இடஒதுக்​கீடு அமல் செய்​யப்​படும். இதன்​படி வரும் 2029-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்​போது மகளிர் இடஒதுக்​கீடு அமலுக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெயா தாக்​குர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில், “நாட்​டின் மக்​கள் தொகை​யில் 50 சதவீதம் பேர் பெண்​கள். ஆனால் மக்​களவை, சட்​டப்​பேர​வை​களில் 4 சதவீத பெண் பிர​தி​நி​தி​கள் மட்​டுமே உள்​ளனர். 33 சதவீத மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் எப்​போது அமலுக்கு வரும் என்​பது யாருக்​கும் தெரிய​வில்​லை. இந்த சட்​டத்தை உடனடி​யாக அமல் செய்ய வேண்​டும்’’ என்று கோரப்​பட்டு உள்​ளது.

நீதிப​தி​கள் நாகரத்​னா, மகாதேவன் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது: இந்​திய மக்​கள் தொகை​யில் பாதி அளவுக்கு பெண்​கள் உள்​ளனர். ஆனால் மக்​களவை, சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் இல்​லை. இந்​தி​யா​வின் மிகப்​பெரிய சிறு​பான்மை சமூக​மாக பெண்​கள் உள்​ளனர். இடஒதுக்​கீட்டை அமல் செய்​யக் கோரி நீதி​மன்​றத்தை அவர்​கள் நாடும் சூழல் இருக்​கிறது. மத்​திய அரசின் கொள்கை முடிவு​களில் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது. எனவே இந்த மனு குறித்து மத்​திய அரசு விரி​வான பதில் மனுவை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

நீதிப​தி​களின் உத்​தர​வின்​படி மத்​திய அரசுக்கு நோட்​டீஸ்​ அனுப்​பப்​பட்​டு உள்​ளது. மத்​திய அரசு பதில்​ மனுவை ​தாக்​கல்​ செய்​த பிறகு தொடர்​ந்​து
வி​சா​ரணை நடத்​தப்​படும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here