புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்

0
14

சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தனி​யார் நிலக்​கரி சுரங்​கம் அமைப்​பது தொடர்​பான கருத்து கேட்பு கூட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆயிரக்​கணக்​கான பழங்​குடி​யின மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதி உள்​ளது. இங்​குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது. இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம் கருத்து கேட்​கும் கூட்​டத்​துக்கு நாளை ஏற்​பாடு செய்யப்​பட்​டது.

இந்த கூட்​டத்தை ரத்து செய்​யக்​கோரி, தரம்​ஜாய்​கர் பகு​தி​யில் உள்ள 12 கிராமங்​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான மக்​கள் ராய்​கர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு வெளியே உள்ள சாலை​யோரம் அமர்ந்து கடந்த வியாழன் இரவு முதல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். கடும் குளிரை​யும் பொருட்​படுத்​தாமல் ஆண்​கள், பெண்​கள், முதி​யோர்​கள், கைக் குழந்​தைகள் ஆகியோர் திறந்த வெளி​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

சுரங்க பணி​கள் தொடங்​கி​னால், எங்​களது வனம், நீர் வளம், நிலம் ஆகியவை அழி​யும் என போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள ஒரு​வர் தெரி​வித்​தார். அதி​காரி​கள் யாரை​யும் கிராமத்​துக்​குள் நுழைய அனு​ம​திக்க மாட்​டோம் என போராட்​டக்​காரர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ராய்​கர் மாவட்ட ஆட்​சி​யர் மயாங் சதுர்​வேதி கூறுகை​யில், ‘‘மக்​களின் பிரச்​சினை​களை பேச்​சு​வார்த்தை மூலம் தீர்ப்​ப​தற்கு மாநில சுற்​றுச்​சூழல் வாரிய அறி​வுறுத்​தலின்​படி இந்த கருத்து கேட்பு கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில் சுற்​றுச்​சூழல் மற்​றும் வாழ்​வா​தா​ரப் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணப்​படும்’’ என்​றார்.

பழங்​குடி​யின மக்​கள் போராட்​டத்தை முன்​னிட்​டு, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தீயணைப்பு வாக​னங்​கள், ஆம்​புலன்​ஸ்​களும் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. சுதந்​திரத்​துக்​குப்​பின் இப்​பகு​தி​யில் பழங்​குடி​யினர் நடத்​தும் மிகப் பெரிய போ​ராட்​டம்​ இது என கூறப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here