பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

0
13

பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.

அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்​டர்​கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்​றனர். கற்​கள் மற்​றும் காலணி​களை கார் மீது வீசி எறிந்​தனர்.

அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவை பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா கூறும்​போது, “லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் பாஜக​வின் வெற்றி உறுதி செய்​யப்​பட்டு விட்​டது. இதனால் எனது காரை வழிமறித்து ஆர்​ஜேடி தொண்​டர்​கள் தாக்​குதல் நடத்​தினர். இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​திடம் புகார் அளித்​துள்​ளேன்.

ஆர்​ஜேடி​யின் காட்​டாட்சி எவ்​வாறு இருக்​கும் என்​ப​தற்கு என் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலே சிறந்த உதா​ரணம். பாஜக மீண்​டும் ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு ரவுடிகள் மீது புல்​டோசர் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

இதுகுறித்து ஆர்​ஜேடி மூத்த தலை​வர் அஜய் சிங் கூறும்​போது, “சில வாக்​குச்​சாவடிகளை கைப்​பற்ற துணை முதல்​வர் விஜய் குமார் சின்ஹா முயற்சி செய்​தார். இதை தடுக்க முற்​பட்​ட​போது மோதல் ஏற்​பட்​டது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here