இன்ஸ்டாகிராமில் இந்து கடவுள்களுக்கு எதிரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளியானது. மைனர் பெண் ஒருவர் வெளியிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்கு பலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அந்த மைனர் பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இதன் அடிப்படையில் மைனர் பெண்ணை உ.பி. போலீஸார் தடுப்பு காவல் இல்லத்தில் வைத்தனர். அவரது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்து அந்த வீடியோவில் இருப்பது பெற்றோருக்கு தெரிந்தபோதிலும் அவர்கள் அதை தடுக்கத் தவறி விட்டனர்.
இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்வோரை அதிகரிக்க அச்சிறுமி இவ்வாறு செய்துள்ளார். அந்த வீடியோவை யாரும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம்’’ என்றார். இந்நிலையில் மைனர் பெண்தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரும் மற்றொரு வீடியோவும் வெளியாகிள்ளது.














