மின்னல்கொடி: கொள்ளைக்காரியாக கலக்கிய ‘ஸ்டன்ட் குயின்’

0
18

ஹாலிவுட் மற்​றும் பிரிட்​டீஷ் திரைப்​படங்​களின் பாதிப்​பில், தனது 17 வயதிலேயே சினி​மாவுக்கு வந்​தவர், வட இந்​தி​ய​ரான கே.அமர்​நாத். ஆரம்ப கால​கட்​டங்​களில் திரைப்​படங்​கள் அதி​க​மாக உரு​வான கொல்​கத்​தாவுக்​குச் சென்ற அவர், அங்கு நடிப்​ப​தற்கு வாய்ப்​பு​களைத் தேடி​னார்.

பின்​னர் மும்​பைக்​குத் திரும்​பி​னார். அவர் எதிர்​பார்த்​த​படி வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. ஜூனியர் ஆர்ட்​டிஸ்​டாக சில படங்​களில் நடித்​தார். பிறகு​தான், சினி​மா​வில் நடிப்பை விட இயக்​குநர் ‘சீட்’ முக்​கி​யம் என்​பது அவருக்​குப் புரிந்​தது. இதனால் நடிப்​பில் இருந்து அவர் கனவு இயக்​குநர் ‘சீட்’ பக்​கம் தாவியது. நான்கு வருடப் போராட்​டங்​களுக்​குப் பிறகு ‘மத்​வாலி ஜோகன்’ என்ற இந்திப்படம் மூலம் இயக்​குந​ரா​னார் அவர். அப்​போது அவருக்கு வயது 21.

இதற்கு பிறகு அவர் தமிழ், இந்​தி​யில் இயக்​கிய ‘டேஞ்​சர் சிக்​னல்’ திரைப்​படம் அவருக்​குப் புகழைப் பெற்​றுத் தந்​தது. இது மிஸ்​டரி த்ரில்​லர் திரைப்​படம். இதையடுத்​து, பக்கா ரவுடி, வீரரமணி, பாக்​யலீலா ஆகிய தமிழ்ப் படங்​களை இயக்​கி​னார் கே.அமர்​நாத். அவர் இயக்​கிய மற்​றொரு திரைப்​படம், ‘மின்​னல் கொடி’. தமிழின் முதல் முழுநீள சண்​டைப் படம் இது.

ராபின்​ஹூட் ஸ்டைல் கதை​தான் படம். மோகினி என்ற இளம் பெண், தன்​னுடைய தந்​தையை இழக்​கிறார். அவளு​டைய சொத்தை தந்​திர​மாகக் கைப்​பற்​றி, அவளை​யும் அவளு​டைய வேலைக்​காரனை​யும் விரட்டி விடு​கிறார் உறவினர். அவர்​கள் தஙகு​வதற்கு கூட இடமில்​லாமல் அலைகிறார்​கள். ஒரு கட்​டத்​தில் அவர்​கள் அலைந்து கொண்​டிருக்​கும்​போது, ‘மின்​னல்​கொடி’ என்ற கொள்​ளைக்​காரனை, போலீ​ஸிடம் இருந்து காப்​பாற்​றுகிறார்​கள். அவர் இறக்​கும் முன், மோகினியை தனது கொள்​ளைக் கூட்​டத்​துக்​குத் தலை​வி​யாக நியமிக்​கிறார்.

ஆண் போல வேடமணிந்து ‘மின்​னல்​கொடி’​யாக களமிறங்​கு​கிறார் மோகினி. ஆனால், அவளுக்கு நல்ல மனம் இருக்​கிறது. அதாவது, பணக்காரர்​களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவது. அதோடு தன்னை ஏமாற்​றிய​வர்​களை பழி​வாங்​கு​கிறாள். போலீஸ் இன்​ஸ்​பெக்​ட​ரான ஜெயகு​மார், அவளைப் பிடிக்க முயற்​சிக்கிறார். பின்​னர் அவள் மின்​னல் கொடி என்று தெரி​யாமல் காதலிக்​கத் தொடங்​கு​கிறார். ஒரு கட்​டத்​தில் தெரிய வந்​ததும் அவளைத் திருந்​தச் செய்து திரு​மணம் செய்​வ​தாக கதை செல்​லும்.

மின்​னல்​கொடி​யாக, கே.டி.ருக்​மணி நடித்​தார். இவர் ‘பாரிஸ் பியூட்​டி’ என அக்​காலத்​தில் கொண்​டாடப்​பட்​ட​வர். மவுனப்பட காலத்​தில் ‘பே​யும் பெண்​மணி​யும்’. இம்​பீரியல் ஸ்டூடியோ தயாரித்த ‘பாமா விஜ​யம்’, ராஜா சாண்டோ இயக்​கிய ‘விப்​ர​நா​ராயணா’, சி.​வி.​ராமனின் இயக்​கத்​தில் ‘விஷ்ணு லீலா’ போன்ற படங்​களில் நடித்​திருக்​கிறார். ‘டெ​வில் அண்ட் தி டான்​சர்’ என்ற ஆங்​கில படத்​தி​லும் நடித்​தவர்.

‘மின்​னல்​கொடி’, இவர் நாயகி​யாக நடித்த படம். இப்​படத்​துக்​காக கத்​திச் சண்​டை, குதிரை சவாரி என ரிஸ்க்​கான காட்​சிகளில் நடித்து மிரட்​டி​னார். இதன் படப்​பிடிப்​புக்​காக குதிரைச் சவாரி செய்​யும்​போது கீழே விழுந்​த​தில் பலத்த காயமடைந்​தார். மாதக் கணக்​கில் படுத்த படுக்​கை​யில் கிடந்​த​தால் இனி அந்​தப் படத்​தில் நடிக்க மாட்​டார் என்​றார், அவருடைய தாயார். ஆனால், ஒப்​பந்​தம் இருந்​த​தால் வேறு வழி​யில்​லாமல், உடல் குண​மான பின் படத்தை முடித்​துக் கொடுத்​தார். இதைத் தொடர்ந்​து, அதிரடி​யான ஆக் ஷன் படங்​களில் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்​பு​கள் வந்​தன.

தமிழ் சினி​மா​வில் கதா​நாயகி ஒரு​வர் முதல்​முறை​யாக இரட்டை ஜடை போட்டு நடித்த படம் இது​தான். அதற்கு முன் யாரும் அப்​படி நடித்​த​தில்​லை. இதை அப்​போது பெரிய விஷய​மாக பேசி​னார்​கள். படத்துக்காக அந்​தக் கால இந்தி நடிகை கோஹர் மாமாஜி​வாலாவை போல கே.டி.ருக்​மணிக்கு குஜ​ராத்தி பாணி​யில் சேலை கட்ட வைத்​தார்​கள். அக்​கால​கட்​டத்​தில் நடித்த இந்​திய -ஆஸ்​திரேலிய ஆக்‌ஷன் நடிகை​யான ‘ஃபியர்​லஸ்’ நதி​யா​வின் ஸ்டைலைப் பின்​பற்றி சண்டைக் காட்சிகளில் நடித்தார் கே.டி.ருக்​மணி.

இந்​தப் படத்தை அன்​றைய பம்​பா​யில், ஸ்டன்ட் படங்​களில் ஆர்​வம் கொண்ட ரம்​னிக்​லால் மோகன்​லால், தனது மோகன் பிக்​சர்ஸ் சார்​பில் தயாரித்​தார். இவர், அந்​தேரி​யில் தனக்​கென ஒரு ஸ்டூடியோவை​யும் வைத்​திருந்​தார். போலீஸ் இன்​ஸ்​பெக்​ட​ராக நடித்த னி​வாச ராவ் அப்​போது ‘ஸ்​டண்ட் ராஜா’ என்று அறியப்​பட்​டார். 1937-ம் ஆண்டு இதே தேதி​யில் (அக்​.30) வெளி​யான இப்​படம்​, வணி​க ரீதி​யாக வெற்​றி பெற்​றது. ஆனால்​ இப்​படத்​தின்​ பிரதி கிடைக்​கவில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here