கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்

0
17

பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார்.

அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இதையடுத்​து, விசா​ரணைக்கு பயந்து மன்​பிரீத் இந்​தி​யா​வுக்கு தப்பி வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், நயாகரா போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இளம் பெண் தனிப்​பட்ட விரோதம் காரண​மாகவே கொலை செய்​யப்​பட்டுள்ளார். இதனால், பொது பாது​காப்​புக்கு எந்த அச்​சுறுத்​தலும் இல்லை. குற்​ற​வாளி​யின் படம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

மக்​கள் அவரை பார்க்க நேர்ந்​தால் பிடிக்க முயற்​சிக்க வேண்​டாம். உடனடி​யாக 911 என்ற எண்​ணுக்கு தகவல் தெரிவிக்​க​வும்’’ என்று கூறி​யுள்​ளனர். கொலைக் குற்​ற​வாளி இந்​தி​யா​வுக்கு தப்​பி​யிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​வ​தால் கனடா பாது​காப்பு அதி​காரி​கள் இந்​திய அதி​காரி​களை தொடர்பு கொண்டு உதவி கோரி​யுள்​ள​னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here