தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்

0
21

தஞ்​சாவூர், திருச்​சி, புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் நெல்​லின் ஈரப்​பத்தை மத்​தி​யக் குழு​வினர் நேற்று ஆய்வு செய்​தனர். தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை​யால் நெல் மூட்​டைகள் நனைந்​துள்​ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்​ப​த​முள்ள நெல்லை கொள்​முதல் செய்ய மத்​திய அரசிடம், தமிழக அரசு அனு​மதி கேட்​டது.

இதையடுத்​து, ஈரப்​ப​தம் தொடர்​பாக ஆய்வு செய்ய மத்​திய அரசு 3 குழுக்​களை அமைத்​தது. இக்​குழு​வைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்​சாவூர் அருகே ஆலக்​குடி​யில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் நேற்று நெல்​லின் ஈரப்​ப​தம் தொடர்​பாக ஆய்வு செய்​தனர்.

ஆய்​வுக் குழு​வினரிடம் விவ​சா​யிகள், “ஒவ்​வோர் ஆண்​டும் மத்​தி​யக் குழு தமிழகத்​தில் ஆய்வு செய்​தா​லும், மத்​திய அரசிட​மிருந்து எந்த அறி​விப்​பும் வரு​வ​தில்​லை. எனவே, ஈரப்​ப​தம் தொடர்​பாக முடி​வெடுக்​கும் அதி​காரத்தை மாநில அரசிடமே மத்​திய அரசு வழங்க வேண்​டும். மேலும், தற்​போது மத்​தி​யக் குழு​வினர் மேற்​கொண்​டுள்ள ஆய்வு தொடர்​பான அறிக்​கையை உடனடி​யாக மத்​திய அரசுக்கு சமர்ப்​பிக்க வேண்​டும்” என்​றனர்.

ஆய்​வின்​போது, தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்​குநர் ஆ.அண்​ணாதுரை, தஞ்​சாவூர் ஆட்​சி​யர் பா.பிரி​யங்கா பங்​கஜம் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். தொடர்ந்​து, மத்​தி​யக் குழு​வினர் ராரா​முத்​திரை கோட்​டை, தெலுங்​கன் குடிக்​காடு, கீழ கோ​வில் பத்து உள்​ளிட்ட இடங்​களில் ஆய்வு செய்​தனர்.

திருச்சி மாவட்​டம் லால்​குடி வட்​டம் வாளாடி வேலா​யுத​புரம் திறந்​தவெளி நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் மத்​தி​யக் குழு​வைச் சேர்ந்த ராஜ்கிஷோர் சாஹி, ராகுல் சர்​மா, தனிஜ் சர்மா ஆகியோர் ஆய்வு மேற்​கொண்​டனர்.

அப்​போது, மத்​தி​யக் குழு​வினர் காலணி​களு​டன் நெல் குவியல் மீது ஏறி நின்று ஆய்வு செய்​த​தால் விவ​சா​யிகள் அதிருப்​தி​யடைந்​தனர். மேலும், காய்ந்த நெல்​மணி​களை பரிசோதனைக்கு சேகரித்​த​தாக மத்​தி​யக் குழு​வினர் மீது விவ​சா​யிகள் குற்​றம்​சாட்​டினர். தொடர்ந்​து, பூவாளூர், கோமாகுடி, கொப்​பாவளி நெல் கொள்​முதல் நிலை​யங்​களி​லும் மத்​தி​யக் குழு​வினர் ஆய்வு செய்​தனர்.

இதே குழு​வினர், புதுக்​கோட்டை மாவட்​டம் கல்​லாக்​கோட்​டை, பந்​து​வாக்​கோட்​டை​யில் உள்ள கொள்​முதல் நிலை​யங்​களுக்​குச் சென்​று, நெல் மணி​களின் ஈரப்​ப​தத்தை ஆய்வு செய்​தனர். குழு​வினர் உரிய நேரத்​துக்கு வராமல், இரவில் வந்து ஆய்வு செய்​ததும், காலணி​யைக் கழற்​றாமல் நெல் குவியலில் ஏறியதும் விவ​சா​யிகளிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது. ஆய்​வின்​போது, எம்​எல்ஏ எம்​.சின்​னதுரை, ஆட்​சி​யர் எம்​.அருணா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here