காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

0
25

காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களுக்கு பரு​வ​மழை கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளதை அடுத்​து, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் பெய்​து​வரும் கனமழை குறித்​தும், முன்​னேற்​பாடு​கள் குறித்​தும் மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் காணொலி வாயி​லாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் ஆய்வு மேற்​கொண்​டார்.

அதைத்​தொடர்ந்​து, இந்​திய வானிலை ஆய்வு மையத்​தால், ஆரஞ்​சு, சிவப்பு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்ள மாவட்​டங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு அதி​காரி​கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்​டங்​களுக்கு உடனடி​யாக சென்று அங்கு மேற்​கொள்ள வேண்​டிய முன்​னேற்​பாடு​கள் குறித்​து, ஆய்வு செய்​யும்​படி முதல்​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதன்​படி, திரு​வள்​ளூருக்கு எல்​காட் நிறுவன மேலாண் இயக்குநர் கே.பி.​கார்த்​தி​கேயன், காஞ்​சிபுரம் – தாட்கோ மேலாண் இயக்​குநர் கே.எஸ்​.கந்​த​சாமி, செங்​கல்​பட்டு – தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​ கழக இயக்​குநர் கிரந்​தி​கு​மார் பாடி, விழுப்​புரம் – தொழிலா​ளர் நலத்​துறை இயக்​குநர் எஸ்​.ஏ.​ராமன், கடலூர் – சுரங்​கம் மற்​றும் கனிமவளத் துறை இயக்​குநர் டி.மோகன், மயி​லாடு​துறை – கோ-ஆப்​டெக்ஸ் மேலாண் இயக்​குநர் கவிதா ராமு, திரு​வாரூர் – ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை ஆணை​யர் டி.ஆனந்த். நாகை – தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக்​கழக மேலாண் இயக்​குநர் ஏ.அண்​ணாதுரை, தஞ்​சாவூர் – தமிழ்​நாடு மருத்​துவ சேவைக்​கழக மேலாண் இயக்​குநர் எச்​.கிருஷ்ணனுன்​னி, கள்​ளக்​குறிச்சி – மாநில தேர்​தல் ஆணைய செயலர் பி..வெங்​கடப்​பிரி​யா, அரியலூர் – இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமி யோபதி ஆணை​யர் எம்​.​விஜயலட்​சுமி, பெரம்​பலூர் – மாற்​றுத்​திற​னாளி​கள் நல ஆணை​யர் எம்​.லட்​சுமி ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், சென்​னை​யில் 15 மண்​டலங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள ஐஏஎஸ் அதி​காரி​கள் மேற்​கொள்​ளவேண்​டிய முன்​னேற்​பாடுகளை உடனடி​யாக தொடங்​கு​மாறும் முதல்​வர் அறி​வுறுத்​தியுள்ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here