மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறாத அனைத்து குடும்பங்களுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம். எங்கள் அரசு பதவியேற்ற 20 நாட்களுக்குள் இது தொடர்பாக சட்டம் இயற்றுவோம். அடுத்த 20 மாதங்களுக்குள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.