டிராபி, பதக்கம் வழங்கப்படாத நிலையிலும் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி – முழு விவரம்

0
22

ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது.

போட்டி முடிந்​தவுடன் பாகிஸ்​தான் வீரர்​கள் ஓய்​வறைக்​குத் திரும்​பினர். இந்​திய வீரர்​கள் பரிசளிப்பு நிகழ்ச்​சிக்​காக மைதானத்​திலேயே இருந்​தனர். சுமார் 90 நிமிடங்​கள் கழித்தே பரிசளிப்​புக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன.

இந்​திய வீரர்​கள் சிலரின் குடும்​பத்​தினரும் வந்​திருந்​தனர். கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வின் மனைவி தேவிஷா, தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரின் மனைவி மற்​றும் மகள்​கள் மைதானத்​தில் இருந்​தனர், அனை​வரும் நல்ல உற்​சாகத்​தில் இருந்​தனர். அதேவேளை​யில் ஓய்​வறை சென்ற பாகிஸ்​தான் அணி வீரர்​கள் சுமார் ஒரு மணி நேரத்​துக்கு பின்​னரே மைதானத்​துக்​குள் வந்​தனர்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்​மா​வும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்​மா​வும் மேடை​யில் இருந்த பிற விருந்​தினர்​களிடம் அதனை பெற்​றுக்​கொண்​டனர். இந்​திய வீரர்​கள் பதக்​கங்​களைப் பெற்ற போது மேடை​யில் இருந்த பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சரும், ஆசிய கிரிக்​கெட் கவுன்​சில் தலை​வரு​மான மோஷின் நக்​வியை கண்டு கொள்​ள​வில்​லை, அவரும் இந்​திய வீரர்​கள் பரிசுகளை வாங்க வரும்​போது கைதட்​ட​வில்​லை. தோல்​வியடைந்த பாகிஸ்​தான் அணி​யினர் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர் அமினுல் இஸ்​லாம் புல்​புலிட​மிருந்து பரிசுகளைப் பெற்​றனர். தொடர்ந்து மோஷின் நக்வி 2-வது இடம் பிடித்​ததற்​கான காசோலையை பாகிஸ்​தான் கேப்​டன் சல்​மான் அலி ஆகா​விடம் வழங்​கி​னார்.

இதைத் தொடர்ந்து இந்​திய அணிக்கு பதக்​கம் மற்​றும் கோப்பை வழங்​கப்பட இருந்​தது. இதை மோஷின் நக்வி வழங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் இந்​திய அணி, மோஷின் நக்​வி​யிடம் இருந்து டிராபியை பெற​மாட்​டோம் என தெரி​வித்​தது. இதனால் பரிசளிப்பு விழா மேடை​யில் பரபரப்பு நில​வியது. மோஷின் நக்​வியைத் தவிர மேடை​யில் இருந்த வேறு யாரிட​மிருந்​தும் கோப்​பையைப் பெற இந்​திய அணி தயா​ராக இருந்​தது. இதனால் மேடை​யில் இருந்த துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி காலித் அல் ஜரூனி, இந்​தி​யா​வுக்கு ஆசி​யக் கோப்​பையை வழங்​கு​வார் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் மோஷின் நக்வி அதற்கு இணங்​க​வில்​லை.

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்​சி​யின் தொகுப்​பாளர் சைமன் டவுல், “இந்​திய அணி தங்​கள் பதக்​கங்​களை​யும் விருதுகளை​யும் இன்று இரவு பெறப்​போவ​தில்​லை’ என்று அறி​வித்​ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்​தது” என்​றார். இதைத் தொடர்ந்து மோஷின் நக்வி மேடை​யில் இருந்து இறங்கி மைதானத்​தின் வெளி​யேறும் வாயிலை நோக்கி நடந்​தார். உடனடி​யாக, போட்டி அமைப்​பாளர்​கள் அனை​வரை​யும் ஆச்​சரியப்​படுத்​தும் வித​மாக,கோப்​பையை விழா மேடை​யில் இருந்து எடுத்​துச் சென்​றனர். இதனால் அனை​வரும் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

இதையடுத்து இந்​திய அணி வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள், துணை ஊழியர்​களு​டன், விழா மேடைக்கு அரு​கில் கூடி சிறிது நேரம் கொண்​டாடினர். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் கற்​பனை​யாக கையில் கோப்​பையை ஏந்தி வந்து சக அணி வீரர்​களிடம் வழங்​கு​வது போன்று பாவனை செய்ய கொண்​டாட்​டம் அரங்​கேறியது. வெற்​றிக்​ கோப்​பை இல்​லாத போ​தி​லும்​ குழு புகைப்​பட அமர்​வையும்​ நடத்​தினர்.

உண்மையான டிராபி எது?- பரிசளிப்பு விழா முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்” என்றார்.

ரூ.21 கோடி பரிசு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ தனது எக்ஸ் வலைதள பதிவில், “மூன்று அடிகள், ஜீரோ பதில். ஆசிய கோப்பை சாம்பியன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவுக்கு ரூ.21 கோடி பரிசுத் தொகை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.28 லட்சம் நன்கொடை: இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் வலைதள பதிவில், “ஆசிய கோப்பை தொடரின் சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்சர்வதேச டி 20-ல் ஒரு போட்டிக்கு ரூ.4 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள். இந்த வகையில் ஆசிய கோப்பையில் விளையாடிய ஏழு ஆட்டங்களுக்கு மொத்தம் ரூ.28 லட்சத்தை சூர்யகுமார் யாதவ் நன்கொடையாக அளிப்பார்.

தேவஜித் சைகியா சொல்வது என்ன?- பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறும்போது, “டிராபியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடம் இருந்து பெறுவதில்லை என்று முடிவு செய்திருந்தோம். அவர், பாகிஸ்தானில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆனால் அதற்காக அவர், பதக்கங்களுடன் கோப்பையையும் எடுத்துச் சென்றிருக்கக்கூடாது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கோப்பையும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நம்புகிறோம்.வரும் நவம்பரில் துபாயில் ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோஷின் நக்விக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்றார்.

‘அவமரியாதை’- பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது,“இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த அவமரியாதை ஆகும். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி சூர்யகுமார் யாதவ் நடந்து கொள்கிறார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here