ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இன்று இந்தியா- இலங்கை மோதல்

0
25

13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது.

12 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா​வில் நடை​பெறுகிறது. நவம்​பர் 2 வரை நடை​பெறும் இந்த தொடரில் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, இந்​தி​யா, நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, இலங்​கை, வங்​கதேசம், பாகிஸ்​தான் ஆகிய 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.

மொத்​தம் 28 லீக் ஆட்​டங்​கள் ரவுண்ட் ராபின் முறை​யில் நடை​பெறுகிறது. இந்​தி​யா​வில் 4 நகரங்​களி​லும், இலங்​கை​யில் கொழும்பு நகரிலும் போட்​டிகள் நடை​பெறுகின்​றன. இந்​தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடி​யாகும். 47 வருடங்​களாக கோப்​பையை வெல்ல முடி​யாத ஏக்​கத்​துக்கு இம்​முறை இந்​திய அணி தீர்​வு​காண முயற்​சிக்​கக்​கூடும்.

இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி, இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்​திய அணி​யின் பேட்​டிங்​கில் ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல், ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ரிச்சா கோஷ், ஹர்​லின் தியோல், தீப்தி சர்மா ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். பந்​து​வீச்​சில் அமன்​ஜோத் கவுர், ரேணுகா சிங், கிரந்தி கவுடு, ராதா யாதவ், ஸ்நே ராணா ஆகியோர் இலங்கை அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here