கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட முதல்வர் மீது பழிபோடுவதா? – இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர்கள் பதில்

0
19

தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், அன்​பில் மகேஸ் தெரிவித்​துள்​ளனர்.

இதுகுறித்து சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​ரமணி​யன் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரச் சம்​பவத்​தி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி அதி​லும் அரசி​யல் செய்து வரு​கிறார். காவல்​துறை​யின் கட்​டுப்​பாடு​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. ‘ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி சொன்​னதன் விளைவே தவெக கூட்​டத்​தி​லும் ஆம்​புலன்​ஸ்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது.

அனு​மதி தரா​விட்​டால் அதி​லும் அரசி​யல் செய்​வது, அனு​மதி அளித்​தால் அந்த நிபந்​தனை​களை மீறு​வது, நிபந்​தனை​களை மீறும் ரசிகர்​களை ஊக்​கு​விப்​பது என தவெக மோச​மான அரசி​யலுக்கு மாறி வரு​கிறது. அதை அதி​முக ஆதரிக்​கிறது. பழனி​சாமி பொறுப்​பற்ற முறை​யில் மக்​கள் மத்​தி​யில் வதந்​தி​களை பரப்​பி, சுய அரசி​யல் ஆதா​யம் தேடு​வது அரசி​யல் அநாகரி​கம். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட வீடியோவை பார்த்​து​விட்​டுக் கதறி​யிருக்​கிறார் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி. கரூர் சம்​பவத்​துக்கு ஆணை​யம் அமைத்​ததை அவர் கண்​துடைப்பு என்​கிறார். இதே நீதிபதி அருணா ஜெகதீசன் விசா​ரணை ஆணை​யத்​தை​தான் தூத்​துக்​குடி துப்​பாக்கி சூடு சம்​பவத்​தின்​போது அமைத்​தவர் அன்​றைய முதல்​வர் பழனி​சாமி.

ஜெயலலிதா மரணத்​தின் மர்​மத்தை விசா​ரிக்க ஆறு​முக​சாமி ஆணை​யத்தை அமைத்​தவரும் பழனி​சாமி​தான். ஜெயலலி​தா​வின் மரணத்தை விசா​ரித்​தது​கூட கண் துடைப்​பு​தா​னா, அமைச்​சர் ஒரு​வர் அழு​வது போல நடிக்க தெரி​யாமல் மாட்​டிக்​கொண்​டார் எனக் கூறி​யுள்​ளார்.

சொத்​துக் குவிப்பு வழக்​கில் ஜெயலலி​தாவு​க்கு தண்டனை வழங்கி 2014-ல் நீதிபதி குன்கா தீர்ப்​பளித்​த​தால், பன்​னீர்​செல்​வம் தலை​மை​யில் புதிய அமைச்​சரவை கண்​ணீரோடு பதவி​யேற்​றது. அப்​போது அழு​வது போல் நடித்த உத்​தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here