பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்து வழக்கறிஞர் பாலு தகவல்

0
20

​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​குழுவை அங்​கீகரித்து இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடிதம் வழங்​கி​யுள்​ளது.

அந்​தக் கடிதத்​தில் பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணி தொடர்வார். அதே​போல், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வரை கட்​சி​யின் தலை​வ​ராக அன்​புமணி​யும், பொதுச்​செய​லா​ள​ராக வடிவேல் ராவணனும், பொருளாள​ராக தில​க​பாமா உட்பட ஏனைய நிர்​வாகி​களும் அப்​படியே தொடர்​கிறார்​கள் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே​நேரத்​தில் கட்​சி​யில் அன்​புமணியை ஏற்று கொண்​ட​வர்​கள் மட்​டும்​தான், கட்​சி​யினுடைய கொடி, சின்​னத்தை பயன்​படுத்த முடி​யும் மற்​றவர்​கள் பயன்​படுத்த கூடாது. ராம​தாஸ் லட்​சி​யங்​களை​யும், நோக்​கங்​களை​யும் அன்​புமணி தலை​மை​யில் நிறைவேற்​று​வோம். பாமக​வில் தனித்​தனி அணி​கள் எது​வும் கிடை​யாது.

ஒரே அணி தான். அன்​புமணி தலை​மையி​லான நிர்​வாகி​கள் மட்​டும்​தான் பாமகவைச் சேர்ந்​தவர்​கள். சிறு குழப்​பத்​தின் காரண​மாக இரண்டு அணி​களாக செயல்​பட்டு வந்​தனர். இந்த கடிதத்​தின் மூல​மாக அவர்​களுக்​கும் அழைப்பு விடுக்​கிறோம். பாமகவை மேலும் வலிமை​யாக்க, ஒதுங்கி இருப்​பவர்​கள், விலகி நிற்​பவர்​கள் அன்​புமணி​யின் தலை​மையை ஏற்று இந்த பக்​கம் வரவேண்​டும்.

கட்​சி​யின் கொடி, சின்​னத்தை அன்​புமணி தலை​மையி​லான நிர்​வாகி​கள் மட்​டும்​தான் பயன்​படுத்த வேண்​டும். கட்​சிக்கு சம்​பந்​தம் இல்​லாத மற்​றவர்​கள் பயன்​படுத்​து​வது தவறு. பாமக தற்​போது கட்சி அங்​கீ​காரத்தை இழந்திருக்​கிறது. தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் வழங்க அதி​காரம் இருக்​கிறது. அந்த அடிப்​படை​யிலே தான் சின்​னத்​தை​யும், இந்த அங்​கீ​கார கடிதத்​தை​யும் வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

கடிதத்​தில் அன்​புமணி பெயர் இல்லை: எம்​எல்ஏ அருள் விளக்கம் – சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பாமக எம்எல்ஏ அருள் கூறிய​தாவது: தேர்​தல் கமிஷனிடம் இருந்து கடிதம் வந்​துள்​ள​தாக வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார். அதில் மாம்​பழம் சின்​னத்தை பாமக​வுக்கு கொடுத்​துள்​ளது என்று அந்த கடிதத்​தில் உள்​ள​தாக​வும் காண்​பித்து இருக்​கிறார். பாமக அலு​வலக முகவரியை, ராம​தாசுக்கு தெரி​யாமல் மாற்றி கொடுத்து தேர்​தல் ஆணைய கடிதத்​தைப் பெற்​றுள்​ளனர்.

அந்த கடிதத்​தில், அன்​புமணி தான், பாமக​வின் தலை​வர் என்று எந்த இடத்​தி​லும் குறிப்​பிடப்​பட​வில்​லை. பாமக தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​ப​டாத, பதிவு செய்​யப்​பட்ட கட்​சி. அதன்​படி, தொடர்ந்​து, தேர்​தலில் போட்​டி​யிட்​டு, 2% வாக்​கு​களை பெறும் கட்​சிக்கு தேர்​தல் ஆணை​யம் ஒரே சின்​னத்தை தொடர்ந்து வழங்​கும். அந்த அடிப்​படை​யில் தற்​போதும் மாம்பழச் சின்​னத்தை தேர்​தல் ஆணை​யம் வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here