தவிர்க்க முடியாத இயக்கம் என நம் உழைப்பால் உணர்த்துவோம்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்

0
20

தமிழகத்​தில் யாரும் தவிர்க்க முடி​யாத மாபெரும் இயக்​கம் தேமு​திக என்று நம் உழைப்​பால் உணர்த்​து​வோம் என பிரேமலதா தெரி​வித்​துள்​ளார்.

21-ம் ஆண்டு தொடக்​கத்​தையொட்டி தொண்​டர்​களுக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா எழு​திய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்​பாற்​பட்ட கட்​சி​யாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்​பாட்​டோடு சனாதனம், சமதர்​மம், சமத்​து​வத்​தைக் கடைப்​பிடிக்​கும் கட்சி​யாக தேமு​திக என்​றும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மிகப்​பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்​தான வெற்றி பெற அனை​வரும் ஒன்​றாக உழைப்​போம். ஜன.9-ல் கடலூரில் நடை​பெற உள்ள மக்​கள் உரிமை மீட்பு மாநாட்​டில் அனை​வரும் தவறாமல் கலந்​து​ கொண்டு வெற்றியடையச் செய்​வது நம் ஒவ்​வொரு​வரின் கடமை.

தேமு​திக இன்று தமிழ்​நாட்​டில் அசைக்க முடி​யாத சக்தி என்​றும், தமிழ்​நாட்டில் யாரும் தவிர்க்க முடி​யாத இயக்​கம் என்​றும், நம் உழைப்​பால் உணர்த்​து​வோம். ‘தமிழன் என்று சொல்​ல​டா, தலை நிமிர்ந்து நில்​ல​டா’ என்ற தலை​வரின் தாரக மந்​திரப்​படி எட்​டுத்​திக்​கும் நமது முரசு வெற்றி முர​சாகக் கொட்ட அனை​வரும் ஒன்​றாக இணைந்து உழைப்​போம், வெற்றி பெறு​வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here