ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3’. இதில் நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிவந்தனர். நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி சரத்குமார் இருந்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இதன் இறுதிப்போட்டிக்கு தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா – காகனா, திலீப்- மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள் தேர்வாகினர். இதில், நிதின் – டித்தியா ஜோடி இந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். முதல் ‘ரன்னர் அப்’பாக தில்லை -ப்ரீத்தாவும் இரண்டாவது ‘ரன்னர் அப்’பாக பிரகனா- காகனாவும் வந்தனர். அவர்களுக்கு விஜய் ஆண்டனி பரிசுகளை வழங்கினார்.
Latest article
தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....
அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...








