குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (69) கேபிள் தொழில் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் திக்கணங்கோடு – குளச்சல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கட்டபுளி என்ற பகுதியில் சென்றபோது சகாயநகரை சேர்ந்த டேவிட் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் செல்வராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்தார். அதேபோல் கீழே விழுந்த டேவிட்டும் அவரது பைக்கின் பின்னால் இருந்த ஜோஷி (19) ஆகியோரும் காயம் அடைந்தனர். இதில் டேவிட் ஜோஷி இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த செல்வராஜ் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Latest article
கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...
நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...
குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...














