டிக்கெட்டுக்காக ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது ரயில்வே துறை

0
199

டிக்கெட்களுக்கான ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியத்தை ரயில்வே வழங்குகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு ரயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால் பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. மீதமுள்ள 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் டிக்கெட்களுக்காக ரூ.56,993 கோடி மானியத்தை வழங்கி வருகிறது.

குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதன் சிறப்பான சேவை பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here