இன்று 5-வது டி20 போட்டி: இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதல்

0
53

இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி திரு​வனந்​த​புரத்​தில் இன்று நடை​பெறவுள்​ளது. திரு​வனந்​த​புரத்​தி​லுள்ள கிரீன்​பீல்ட் சர்​வ​தேச மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு இப்​போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்ளது.

தொடர்ச்​சி​யாக 3 போட்​டிகளில் வெற்றி பெற்​றிருந்த இந்திய அணி, விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது போட்​டி​யில் நியூஸிலாந்​திடம் தோல்வி கண்​டது. இந்​திய அணி​யின் அபிஷேக் சர்​மா, சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் குறைந்த ரன்​களில் இந்த போட்டியில் அவுட்​டானது​தான் தோல்விக்​குக் காரணம். சஞ்சு சாம்​சன், ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி​னாலும் வெற்​றியை எட்ட முடிய​வில்​லை.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அபிஷேக் சர்​மா, சூர்யகுமார், பாண்​டி​யா, சஞ்சு சாம்​சன், துபே ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸை எதிர்​பார்க்​கலாம். அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைக் குவிக்​கும் அபிஷேக் சர்​மா​வின் விக்​கெட்டை இலக்​காகக் கொண்டு நியூஸிலாந்து பந்​து​வீச்​சாளர்​கள் பந்​து​வீசி வரு​கின்​றனர்.

அவரது விக்​கெட்டை வீழ்த்​தும்​போது இந்​திய அணி​யின் உத்​வேகத்​தைக் குறைக்​கலாம் என அவர்​கள் எண்ணுகின்றனர். எனவே, இன்​றைய ஆட்​டத்​தி​லும் அபிஷேக் சர்​மாவைக் கட்​டுப்​படுத்த நியூஸிலாந்து பந்​து​வீச்​சாளர்​கள் வியூ​கம் வகுக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் இந்​திய அணி வீரர்​கள் அர்​ஷ்தீப் சிங், ஜஸ்​பிரீத் பும்​ரா, குல்​தீப் யாதவ் சிறப்​பாக செயல்​பட்டு வருகின்றனர். கடந்த போட்​டி​யில் ஹர்​ஷித் ராணா அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்​தார். கடைசி ஆட்​டத்​தில் இவர்களது பந்​து​வீச்​சு எதிரணிக்கு நிச்​ச​யம் அழுத்​தத்​தைக் கொடுக்​கும்.

கடந்த ஆட்​டத்​தில் வருண் சக்​ர​வர்த்தி களமிறங்​க​வில்​லை. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் வருணுக்கு வாய்ப்பு கிடைக்​கும் எனத் தெரி​கிறது. அதே​நேரத்​தில் 4-வது போட்டி​யில் வெற்றி பெற்ற உற்​சாகத்​தில் நியூஸிலாந்து அணி களமிறங்​கு​கிறது. தொடக்க ஆட்​டக்​காரர் டேவன் கான்வே கடந்த ஆட்டத்தில் 44 ரன்​களும், டிம் செய்​பர்ட் 62 ரன்​களும் குவித்​தனர். கடைசி நேரத்​தில் டேரில் மிட்​செல் 39 ரன்​களை விளாசி​னார்.

எனவே, கடைசி ஆட்​டத்​தில் இவர்​களிட​மிருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். கடந்த ஆட்டத்தில் பந்​து​வீச்​சில் மேட் ஹென்​றி, ஜேக்​கப் டஃப்​பி, ஜகாரி போக்​ஸ், இஷ் சோதி, மிட்​செல் சான்ட்​னர் ஆகியோர் கட்​டுக்​கோப்​பாக பந்​து​வீசி இந்​திய அணி​யின் விக்​கெட்​களைச் சாய்த்​தனர்.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய பேட்ஸ்மேன்களுக்கு இவர்​கள் சிறப்​பான வகை​யில் பந்​து​வீசி நெருக்​கடியைக் கொடுப்​பர் என எதிர்​பார்க்​கலாம். ஏற்​கெனவே, டி20 தொடரை இந்​திய அணி கைப்பற்றியுள்ள​தால்​, எந்​த​வித நெருக்​கடி​யும்​ இன்​றி சிறப்​பாக விளை​யாடும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

நேரம்​: இரவு 7

நேரலை: ஸ்​​டார்​ ஸ்​போர்​ட்​ஸ்​,

ஜியோஸ்டார் செயலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here