புதிய டிஜிபி தேர்வு பட்டியலில் 3 பேர் இடம் பிடித்தனர்

0
12

பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெற்​றார்.

இதையடுத்​து, புதிய டிஜிபி தேர்வு போட்​டி​யில் டிஜி​பி-க்​களான சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் நியமிக்​கப்பட வாய்ப்பு உள்​ள​தாக கருதப்​பட்​டது. ஆனால், அவர்​களுக்கு ஜூனிய​ரான நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமனுக்கு கூடு​தல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் கடந்த 26-ம் தேதி நடை​பெற்​றது. இதில் சீமா அகர்​வால், சந்​தீப்​ராய் ரத்​தோர் உள்பட 8 பேரின் பெயர்​கள் பரிசீலனை செய்​யப்​பட்​டது.

இதன் இறுதி பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இவர்​களில் ஒரு​வர் விரை​வில் தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி-​யான சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கப்​படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here