விரைவில் 3 எம்எல்ஏக்கள் என்னுடன் வருவார்கள்: ராமதாஸ் நம்பிக்கை

0
13

விரை​வில் என்​னுடன் 3 எம்​எல்​ ஏக்​கள் வரு​வார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். ஓசூரில் நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸ் பேசும்​போது, “உங்​கள் குழந்​தைகளுக்கு செல்​போன் வாங்​கிக் கொடுக்​காதீர்​கள்.

எனது மகள் காந்​தி​மதி இன்று முதல்​முறை​யாக பேசி​னார். அவர் நன்​றாகப் பேசி​யுள்​ளார். தற்​போது என்​னுடன் 2 எம்​எல்​ஏக்​கள் உள்ளனர். விரை​வில் மீத​முள்ள 3 எம்​எல்​ஏக்​களும் என்​னுடன் வரு​வார்​கள்” என்​றார்.

முன்​ன​தாக ராம​தாஸ் மகள் காந்​தி​மதி பரசு​ராமன் பேசி​ய​தாவது: எனது தந்தை ராம​தாஸ் துணிச்​சலுக்​கும், தியாகத்​துக்​கும் உதாரண​மானவர். முதிர்ந்த வயதி​லும், உடல் தளராது, உள்ள உறுதி குறை​யாது துடிப்​போடு செயல்​பட்டு வரு​கிறார்.

அவருக்​குத் துணை​யாக நிற்​பது எனது கடமை. அவரது தலை​மை​யிலும், வழி​காட்​டு​தலிலும் பாமக மாபெரும் சக்​தி​யாக மாறியுள்ளது. ராம​தாஸின் ஒற்​றைத் தலை​மையை ஏற்​று, ஒற்​றுமை​யுடன் தொடர்ந்து போராடு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here