வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர்

0
14

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்​சல் தலை, நாண​யத்தை பிரதமர் மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார்.

வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார்.

சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு வந்தே மாதரம் பாடல் மிகப்​பெரிய உத்​வேகம் அளித்​தது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசிய பாடலாக அறிவிக்​கப்​பட்​டது. இந்த பாடல் இயற்​றப்​பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​திருக்​கிறது.

இதையொட்டி மத்​திய அரசு சார்​பில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது வந்தே மாதரம் பாடலின் நினை​வாக அஞ்​சல் தலை, நாண​யத்தை அவர் வெளி​யிட்​டார். மேலும் பாடலின் ஓராண்டு கொண்​டாட்​டத்​தை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இதன்​படி அடுத்த ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வரை நாடு முழு​வதும் பல்​வேறு விழாக்​கள், நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன.

விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: இன்​றைய தினம் வந்தே மாதரத்​தின் 150-வது ஆண்டு நிறைவை கொண்​டாடு​கிறோம். இது வரலாற்று சிறப்​புமிக்க தினம். வந்தே மாதரம் என்​பது வெறும் வார்த்தை கிடை​யாது. இது ஒரு மந்​திரம், ஒரு சக்​தி, ஒரு கனவு, ஒரு தீர்​மானம். பாரத அன்னை மீதான பக்​தியை பாடல் வெளிப்​படுத்​துகிறது. இந்​தி​யர்​களால் எதை​யும் சாதிக்க முடி​யும் என்​பதை பாடல் உணர்த்​துகிறது.

கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்​ஜி​யின் ஆனந்​தமடம் நாவலில் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்​றது. இந்த நாவல் குறித்து கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூர் கூறும்​போது “ஆனந்​தமடம் என்​பது வெறும் நாவல் கிடை​யாது. அது சுதந்​திர இந்​தி​யா​வின் கனவு” என்று தெரி​வித்​தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் மீது குண்​டு​கள் வீசப்​பட்​ட​போது, அவர்​களின் ஒரே மந்​திர​மாக வந்தே மாதரம் இருந்​தது. வீர் சாவர்க்​கர் போன்ற சுதந்​திரப் போராட்ட வீரர்​கள், மக்​களை சந்​திக்​கும் போதெல்​லாம் வந்தே மாதரம் என்றே வாழ்த்​தினர். பல்​வேறு சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் தூக்கு மேடை​யில் நின்று கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடினர்.

கடந்த 1927-ம் ஆண்​டில் மகாத்மா காந்தி கூறும்​போது, “வந்தே மாதரம் முழு இந்​தி​யாவை பிர​திபலிக்​கிறது” என்று தெரி​வித்​தார். அரவிந்​தர் உட்பட பல்​வேறு தலை​வர்​கள் இந்த பாடலுக்கு புகழாரம் சூட்டி உள்​ளனர்.

இந்த நூற்​றாண்டை இந்​தி​யா​வின் நூற்​றாண்​டாக மாற்ற வேண்​டும். இதற்​காக சுய​சார்பு இந்​தியா திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும். அந்த லட்​சிய இலக்கை நோக்கி நாம் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறோம்.

நமது ராணுவம், எதிரி​களின் சதித் திட்​டங்​களை முறியடிக்​கும்​போதும், தீவிர​வாதத்தை முறியடிக்​கும்​போதும், நமது வீரர்​களின்​ ஒரே மந்​திர​மாக வந்​தே ​மாதரம்​ விளங்​கு​கிறது. இந்​த ​பாடல்​ இந்​தி​யாவை ஒன்​றிணைக்​கிறது. ​நாட்​டின்​ ஒற்​றுமையை வலுப்​படுத்​துகிறது. இவ்​​வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசி​னார்​.

பாடலின் முக்​கிய வரி​கள் நீக்​கம் – டெல்லி விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: அறிவை அளிப்​பவள் சரஸ்​வ​தி, செல்​வத்தை அளிப்​பவள் லட்​சுமி, ஆயுதங்​கள், வேதங்​களை ஏந்​திய துர்க்கை என்று வந்தே மாதரம் பாடலில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக கடந்த 1937-ம் ஆண்​டில் வந்தே மாதரம் பாடலின் முக்​கிய​மான வரிகள் (சரஸ்​வ​தி, லட்​சுமி, துர்க்கை சார்ந்த வசனங்​கள்) நீக்​கப்​பட்​டன. அப்​போதே தேசப் பிரி​வினைக்​கான விதைகள் விதைக்​கப்​பட்​டன. ஏன் இந்த அநீதி இழைக்​கப்​பட்​டது? இன்​றள​வும் பிரி​வினை​வாதம் தேசத்​தின் நலனுக்கு மிகப்​பெரிய சவாலாக விளங்​கு​கிறது. இளம் தலை​முறை இதை புரிந்​து​கொள்​வது மிக​வும் அவசி​யம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here