காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு

0
10

காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது.

இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் இதற்​கான முடிவு எடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மனோஜ் சின்ஹா வெளி​யிட்ட பதி​வில், “முழு​மை​யான பாது​காப்பு மறுஆய்வு மற்​றும் கலந்​துரை​யாடலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கூடு​தல் சுற்​றுலா தலங்​களை மீண்​டும் திறக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

காஷ்மீர் பிராந்​தி​யத்​தில் அருபள்​ளத்​தாக்​கு, ராஃப்​டிங் முனையன்​னர், அக்​காட் பூங்​கா, பத்​ஷாஹி பூங்​கா, கமான் போஸ்ட் உள்ளிட்ட ஏழு சுற்​றுலா தலங்​களும், ஜம்மு பிராந்​தி​யத்​தில் ராம்​பனில் உள்ள டாகன் டாப், கது​வா​வில் உள்ள தாகர், சலாலில் உள்ள சிவ குகை உள்​ளிட்ட 5 சுற்​றுலா தலங்​களும் மீண்​டும் திறக்​கப்​படும்” என்று கூறி​யிருந்​தார். கடந்த ஜூன் மாதம் காஷ்மீரில் 8 சுற்​றுலா தலங்​களை திறக்க சின்ஹா உத்​தர​விட்​டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here