சிற்றாறுபட்டணம் கால்வாயின் சுவாமியார்மடம் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறைக்கு புகார் சென்றதுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று திருவட்டாறு போலீஸ் பாதுகாப்புடன், தாசில்தார் மரகதவல்லி தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றினர்.
