Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

புதுக்கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

0

இனயம் திருப்பு என்ற பகுதியில் புதுக்கடை போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்ற 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 14.5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் ஜேக்கப் (29), தேங்காபட்டணம் பகுதி எட்வர்ட் ஜார்ஜ் (63) என்பது தெரிய வந்தது. இவர்கள் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக விநியோகம் செய்ய புகையிலைப் பொருள்களைக் கொண்டுவந்தது தெரிந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைதுசெய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version