திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று வைகாசி விசாக காவடி யாத்திரையும், வரும் 30 ஆம் தேதி மாலை ஜடாதீஷ்வர பஜனை குழுவினரின் பஜனையும் நடைபெற உள்ளது.
