தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு நிலவியது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், சுபிதா தனது சித்தப்பா ராஜேஷை தள்ளிவிட்டதில் அவர் காயமடைந்தார். பதிலுக்கு ராஜேஷ் சுபிதாவை வெட்டி கொலை செய்தார். இரணியல் போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்.
