Home விளையாட்டு செய்திகள் இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் தொடர்: கைப்பற்றியது இந்தியா ஏ

இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் தொடர்: கைப்பற்றியது இந்தியா ஏ

0

இலங்கை​யில் நடை​பெற்று வரும் 2-வது அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்டி​​யில் இந்தியா ஏ அணி 10 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் இலங்கை ஏ அணி​யைத் தோற்​கடித்​தது. இதையடுத்து 2-0 என்ற கணக்​கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்​ளது.

இந்​தப் போட்டி காலே மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. முதல் இன்​னிங்​ஸில் இலங்கை ஏ 366 ரன்​கள் எடுத்​து. இந்​தியா ஏ அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 8 விக்​கெட் இழப்​புக்கு 541 ரன்​கள் குவித்​திருந்​தது.இந்​நிலை​யில் நேற்று 4-ம் நாள் ஆட்​டம் நடைபெற்றது. யாஷ் தாக்​குர் 2 ரன்​களு​ட​னும், சரண்ஷ் ஜெயின் 68 ரன்​களு​ட​னும் விளை​யாடினர். யாஷ் தாக்​குர் மேலும் ரன் சேர்க்காமல் ஆட்​ட​மிழந்​தார். சரண்ஷ் ஜெயின் 70 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இதையடுத்து இந்​திய ஏ அணி​யின் முதல் இன்​னிங்ஸ் 543 ரன்களுக்கு முடிவுக்கு வந்​தது. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இலங்கை ஏ அணி 209 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக ஆஷண் பண்​டாரா 87 ரன்​கள் சேர்த்தார். இந்​திய அணி தரப்​பில் குர்​னூர் பிரார் 6, சரண்ஷ் ஜெயின் 2, ஆகிப் நபி, யாஷ் தாக்​குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்​பற்​றினர்.

இதையடுத்து 33 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய இந்​தியா ஏ அணி 6.2 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 36 ரன்​கள் சேர்த்து வெற்றி கண்​டது. சாய் சுதர்​ஷன் 25, அமன் மோகடே 11 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதையடுத்து 2 போட்​டிகள் இந்த அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் தொடரை இந்​தியா ஏ அணி 2-0 என்ற கணக்​கில் கைப்பற்றியுள்ளது. இரு இன்​னிங்​ஸ்​களி​லும் சேர்த்து குர்​னூர் பிரார் 10 விக்​கெட்​களைக்​ கைப்​பற்​றி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version