Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் பெட்ரோல் கலப்படம்: வாலிபர்கள் பெட்ரோல் பங்க் முற்றுகை

நாகர்கோவிலில் பெட்ரோல் கலப்படம்: வாலிபர்கள் பெட்ரோல் பங்க் முற்றுகை

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பயோனியர் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் கலப்படம் நடந்ததாகக் கூறி வாலிபர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோல் அடித்த பிறகு அவரது வாகனம் பழுதானதால், நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெட்ரோல் பங்கு பணியாளர்கள் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என அலட்சியமாக பதிலளித்ததாகவும் வேதனை தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version