Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: கலிங்கராஜபுரத்தில் முதியவர் மாயம்

நித்திரவிளை: கலிங்கராஜபுரத்தில் முதியவர் மாயம்

0

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் பாவல்ஸ் (63). மீன்பிடி தொழிலாளி. தற்போது வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.   இவரது மனைவி தாமஸ் மேரி. சம்பவ தினம் தாமஸ் மேரி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பாவல்சை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தாமஸ் மேரி நித்திரவிளை போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தர கேட்டு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version