Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையம்: ரூ. 66 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் நிறைவு

மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையம்: ரூ. 66 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் நிறைவு

0

மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையத்தின் சுவர்கள் மற்றும் பில்லர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் வகையில், ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இப்பணியின் ஒரு பகுதியாக, சுவர்கள் மற்றும் பில்லர்களில் வண்ணப் படங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி மற்றும் கமிஷனர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version