கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கனிமம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
