Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை

இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை

0

கண்டன்விளை பகுதியை சேர்ந்த ஆஸ்கிலின் மினி (29) என்ற 2 மாத கர்ப்பிணி பெண், நேற்று அதிகாலை 3.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரை சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் இவரது கணவர் காட்வின், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்து மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு சென்றிருந்தார். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version